எள்ளுச் செடியின் சமூலத்தை நன்றாக உலர்த்தி தீயிட்டு எரித்து எடுத்த சாம்பல் அதற்கு 4 மடங்கு சுத்த சலம் விட்டுக் கரைத்து அசையாமல் 3 நாள் வைத்து 4வது நாள் அடுப்பேற்றி அதில் பூநீறு,கல்லுப்பு,வெடியுப்பு,வகைக்கு 3 பங்கு வீதம் போட்டு கலக்கி எரித்துக் குழம்பான பதத்தில் அகலப் பீங்கான் தட்டுக்களில் விட்டு ரவி முகத்தில் வைக்க உப்பாகும்,இது சிவந்த நிறத்தில் இருக்கும்.
(கார சார லவணம் :25) 1.வழலை , 2.பூநீறு , 3.நவசாரம் , 4.எவச்சாரம் , 5.வளையலுப்பு , 6.கெந்தியுப்பு , 7.வெங்காரம் , 8.ஏகாம்பரச் சாரம், 9.அமுரி உப்பு , 10.பச்சை கற்பூரம் , 11.கற்பூரம் , 12.சத்திசாரம் , 13.வெடி உப்பு , 14.மீனம்பர் , 15.பென்னம்பர் , 16.சவுட்டுப்பு , 17.நில உப்பு, 18.இந்துப்பு , 19.சிந்துப்பு, 20.கல்லுப்பு , 21.காசிச் சாரம், 22.பிடா லவணம், 23.அட்டுப்பு, 24.சீனம் , 25.கடல் நுரை .